31-ம் தேதி ராமேஸ்வரத்தில் யாக சாலை பூஜை
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை ஜனவரி மாதம் 31 ம் தேதி துவங்குகிறது. இதனால் 31 ம் தேதி மாலைமுதல் 4 ம் தேதி வரை திருக்கோவிலின் நடைசாத்தப்படுகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 ம் தேதி நடக்கிறது. இதற்கான பணிகளைபார்வையிட ராமேஸ்வரம் சென்ற இந்து அறநிலையத்துறை ஆணையர் சாவர்க்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு ரூ 2 கோடி செலவில் கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை பூஜை அமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. 81 குண்டங்கள் அமைத்து 325 சிவாச்சாரியார்கள் யாகம்வளர்க்கின்றனர்.
பூஜைகள் ஜனவரி 31 ம் தேதி தொடங்குகிறது. இதனால் இந்த நேரத்தில் கோவில் நடைசாத்தப்படும். இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்குள் உள்ள 22தீர்த்தங்களிலும் நீராட அனுமதி இல்லை.
கும்பாபிஷேகம் காண 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தங்குவதற்காக ராமநாதபுரம்மற்றும் அருகாமையிலுள்ள ஊர்களில் தங்கும் விடுதிகள் பெருமளவு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கங்கை, காவேரி, தாமரபரணி, வாணதீர்த்தம், ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பு, குற்றாலம் சித்ரா நதி, அக்னி தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் ராமேஸ்வரம்கொண்டு வரப்பட்டு கோவில் உள்ள கோபுரங்களில் அபிஷேகம் செய்யப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications