மர்ம ஹெலிகாப்டர் .. "விசாரணை துவங்கியது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கடற் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் இறக்கி விடப்பட்ட மர்ம மனிதர் விவகாரம் குறித்து ஏற்கனவே விசாரணை தொடங்கி விட்டதுஎன்று முதல்வர் சண்முகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் முதல்வர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், பாண்டிச்சேரியில் ஜனவரி 18 ம் தேதி பானித்திட்டு கடற்படைப் பகுதியில்மர்மமான முறையில் ஒரு நபர் இறக்கி விடப்பட்டார். பின்னர் 30 நிமிடங்கள் கழித்து அவர் மீண்டும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச்சம்பவம் குறித்து ஏற்கனவே போலீஸார் புலன் விசாரணை தொடங்கி விட்டனர் என்றார்.
முன்னதாக, பாண்டிச்சேரி அ.தி.மு.க, இச்சம்பவத்தை கண்டித்ததுடன், விடுதலைப்புலிகள் ஊடுருவுவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தான் இது என்றுகுற்றம்சாட்டியுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications