கடற்படையில் 2 போர்க்கப்பல்கள் சேர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மும்பையில் உள்ள மாஸ்கான் கப்பல்கட்டும் தொழிற்சாலையில் இந்திய கடற்படை இரண்டு புதியபோர்க்கப்பல்களை அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

ஐஎன்எஸ் மும்பை மற்றும் ஐஎன்எஸ் கிரிச் ஆகியவையே அந்தப் போர்க் கப்பல்களாகும். இரண்டுபோர்க்கப்பல்கள் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்து வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். போர்க்கப்பல்கள்தொடக்கவிழா மகாராஷ்டிர மாநில கவர்னர் பி.சி.அலெக்சாண்டர் முன்னிலையில் நடந்தது.

போர்க்கப்பல்கள் திறந்து வைக்கும் விழாவில் கலந்து கொண்ட கடற்படைத் தளபதி சுஷீல்குமார் கூறுகையில்,இரண்டு போர்க்கப்பல்கள் இரண்டும் ஏவுகணை எதிர்ப்புப் போர்க்கப்பல்கள் என்றார்.

ஐஎன்எஸ் மும்பை போர்க்கப்பல் 6,700 டன் எடை கொண்டது. இதில் அதிநவீன ரேடார்கள் மற்றும் ஏவுகணைகள்பொருத்தப்பட்டுள்ளன. இது மணிக்கு 32 மைல்கல் வேகத்தில் செல்லக்கூடியது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதமே இந்திய கப்பற்படையில் சேர்க்கப்பட வேண்டிய இந்தக் கப்பல் சிலதொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக தாமதமாகியிள்ளது.

ஐ.என்.எஸ். கிரிச் கப்பல் 1500 டன் எடை கொண்டது. இந்தக் கப்பலும் எதிர்ப்புப் போர்க்கப்பல் வகையைச்சேர்ந்தது. அதி நவீன ரேடார்கள், தரையில் இருந்து விண்ணுக்குச் செல்லும் ஏவுகணைகள் இதில்பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு போர்க்கப்பல்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+