For Daily Alerts
Just In
அஸ்ஸாமில் 8 பேர் படுகொலை
குவஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலத்தில், தீவிரவாதிகள் நடத்திய வெறித்தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
நல்பாரி மாவட்டம், சங்குச்சி என்ற கிராமத்தில் மரம் வெட்டுபவர்கள் தங்கியுள்ள்ளனர். இந்தக் கிராமத்திற்கு,திங்கள்கிழமை இரவு, 20 முதல் 25 பேர் அடங்கிய தீவிரவாதிகள் வந்தனர்.
பின்னர் மரம் வெட்டுபவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 பேர்அங்கேயே இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு யார் என்றுதெரியவில்லை.
சம்பவ இடத்திற்குப் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். மற்றொரு சம்பவத்தில், இதேபோல, 3 பேரைதீவிரவாதிகள் வெட்டிக் கொன்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, January 23, 2001, 5:30 [IST]