கல்லூரி மாணவர்கள் மோதல் .. கலங்கியது சென்னை
சென்னை:
சென்னையில் இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில், அரசு பஸ்களின் கண்ணாடிகள்உடைக்கப்பட்டன. பல வாகங்கள் சேதமடைந்தன.
சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் மாநிலக் கல்லூரி மாணவிகள் சிலரை, பச்சையப்பா கல்லூரியைச்சேர்ந்த மாணவர்கள் கேலி செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த மாணவிகளுக்கு ஆதரவாக மாநிலக்கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்தனர்.
பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் நின்று கொண்டிருந்த பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சிலரை,மாநிலக் கல்லூரி மாணவர்கள் தாக்கியுள்ளனர். பதிலுக்கு அவர்களது ஆதரவு மாணவர்களும் தாக்கினர். இதனால்அந்த இடமே போர்க்களமாகியது.
சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சாலையில்போய்க் கொண்டிருந்த பிற வாகனங்களும் தாக்கப்பட்டன. மொத்தம் 6 பஸ்கள் சேதமடைந்தன. 30க்கும்மேற்பட்ட பிற வாகனங்களும் சேதமுற்றன.
அப்பகுதியில் உள்ள அபிராமி தியேட்டர் வளாகத்திலும் மாணவர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.இதில்தியேட்டரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
போலீஸார் விரைந்து வந்து கலவரத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். மொத்தம் 6மாணவர்கள் மோதல் காரணமாகக் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications