வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய ஆமைகள்
வேதாரண்யம்:
வேதாரண்யம் கடற்கரையில் அபூர்வ வகையான 30 கடல் ஆமைகள் இறந்து போய்கரை ஒதுங்கின.
கடல் பகுதிகளில் 7 வகை கடல் ஆமைகள் உள்ளன. அவற்றில் 3 வகை ஆமைகள்பாக்ஜலசந்தியில் இருக்கின்றன. இவற்றில் ஆலிவர் ரெட்லி என்ற வகை ஆமைகள்இந்திய கடற்கரை பகுதிகளில் முட்டையிட்டு செல்கின்றன.
அவை அது போல் வரும் போது மீன்பிடி படகிலோ அல்லது விசைப்படகிலோஅடிபட்டு இறந்து போவதும் நிகழ்ந்து வருகிறது. இதையும் மீறி ஆமைகள்கடற்கரையில் போடும் முட்டைகளை காக்கைகள் தின்றுவிடும். முட்டையிலிருந்துவெளிவரும் ஆமைக்குஞ்சுகளை நரிகள் தின்று விடுகின்றன.
இந்த அரிய வகை ஆமைகளை பாதுகாக்க வேதாரண்யத்தில் கோடியக்கரை விலங்குள்சரணாலயத்தில் ஆமைகள் குஞ்சு பொறிப்பகம் அமைக்கப்பட்டது
இந்ச நிலையில் வேதாரண்யம் அருகே இருக்கும் ஆறுகாட்டுத்துறை பெரிய குத்தகைமற்றும் புஷ்பவனம் கடற்பகுதியில் 30-க்கும் அதிகமான ஆலிவர் ரெட்லி வகைஆமைகள் இறந்த நிலையில் கரையில் காணப்பட்டன. இவை மீன்பிடி படகுகளில்அடிபட்டு இறந்து போயிருக்கலாம் என எண்ணப்படுகிறது. இந்த ஆமைகளின் எடை50 கிலோ முதல் 60 கிலோ வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications