ஜப்பான் செல்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் அடுத்த மாதம் 10-ம் தேதி ஜப்பான் செல்லவிருக்கிறார்.
பிரதமர் வாஜ்பாய் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் 14-ம்தேதி வரை ஜப்பானில்சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார்.
இது குறித்து அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஜப்பானுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்த அடுத்தமாதம் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஜப்பானில் சுற்றுப்பயணம்செய்யவிருக்கிறார் வாஜ்பாய்.
சுற்றுப்பயணத்தின் போது ஜப்பான் மன்னர்அரிஹிட்டோவை சந்தித்து பேசுவார்.மன்னர் அளிக்கும் மதிய உணவு விருந்தில் கலந்து கொள்வார்.
அதன் பின் ஜப்பான் பிரதமர் யோஷிரோ மோரியை சந்தித்து பேச்சு வார்த்தைநடத்துவார். பின் அவர் அளிக்கும் இரவு உணவு விருந்தில் கலந்து கொள்வார் எனதெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்ற ஆகஸ்டு மாதம் மோரி இந்தியா வந்திருந்த போது பிரதமரை ஜப்பானுக்குவருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று வாஜ்பாய் ஜப்பான்செல்லவிருக்கிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications