கால்வாய் சுத்திகரிப்புக்கு ரூ 1,700 கோடி ..அமைச்சர்
காஞ்சிபுரம்:
சென்னையை சுற்றியுள்ள 6 கால்வாய்கள், ரூ1,700 கோடி செலவில் சுத்தம் செய்யப்படஉள்ளன.
மத்திய சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு சென்னையைசுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 6 நீர் வழி போக்குவரத்தை சுத்தம் செய்ய ரூ 1,700கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மடம்பாக்கம் பகுதியில் நாடாளுமன்ற தொகுதிக்கான வளர்ச்சிநிதியின் அடிப்படையில் கட்டப்பட்ட கட்டிடத்தை திங்கள்கிழமை மாலை அவர்துவக்கி வைத்தார் அப்போது பேசுகையில் அவர் தெரிவித்ததாவது
ராமேஸ்வரம் பகுதிக்கு ரூ 9. 5 கோடியும், திருநெல்வேலி பகுதிக்கு ரூ 60 கோடியும்,கும்பகோணத்திற்கு ரூ 40 கோடியும், திருவாரூருக்கு ரூ 36 கோடியும், தஞ்சாவூருக்குரூ 30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போன்று கொடைக்கானல், உதகமண்டலம்ஏரிகளுக்கும் நிதி ஒதுக்கப்படும்.
ரூ 150 கோடி செலவில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தவும், ரூ 120 கோடி செலவில்காவேரி ஆற்றை சுத்தப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனதெரிவித்தார்.
யு.என்.ஐ.