"டெண்டுல்கர் இந்தியாவில் மட்டுமே நன்றாக ஆடுகிறார்
துபாய்:
சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் மட்டுமே சிறப்பாக விளையாடுகிறார். மேலும், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில்ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது என்று முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணித் தலைவர் பேரி ரிச்சர்ட்ஸ்கூறியுள்ளார்.
பேரி ரிச்சர்ட்ஸ் எழுதியுள்ள புத்தகமொன்றில், இந்திய கிரிக்கெட் குறித்து சில வார்த்தைகள் உள்ளன.
அதிலிருந்து சில துளிகள் ...
டெண்டுல்கர் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் இந்தியாவில் மட்டுமே அவர்சிறப்பாக ஆடுகிறார். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள வேகமான பிட்சுகளிலும்அவர் சிறப்பாக விளையாட முயற்சிக்க வேண்டும். அப்போதுதான், லாரா போல உலகப் புகழ் பெற முடியும்.
என்னைப் பொருத்தவரை, கிரஹாம் கூச், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர்தான் தலைசிறந்த பேட்ஸ்மென்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி என்னைப் பிரமிக்க வைக்கிறது. அந்த அணியில்உள்ள வீரர்கள் அனைவரும்,கிரிக்கெட்டையே பெரிதாக நினைக்கிறார்கள். அதன் மூலம் கிடைக்கும பணம் அதிகமாக இருப்பதால் அப்படிநினைக்கிறார்களோ, என்னவோ எனக்குத் தெரியாது.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கும் பிற அணிகளுக்குமிடையே இடைவெளி அதிகரித்து விட்டது.இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. கிரிக்கெட்டில் இப்போதைக்கு ஆஸ்திரேலியாதான் தலை சிறந்தஅணியாக உள்ளது என்று கூறியுள்ளார் ரிச்சர்ட்ஸ்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications