Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிசா. பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மதுரை மாநகராட்சி துணை மேயர் மிசாபாண்டியன் ஐந்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டார்.

நிதி நிறுவன அதிபர் ஜெகதீசனை துணை மேயரின் உத்தரவின் பேரில் கொலை செய்ததாக வரிச்சியூர் செல்வம்என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரை விசாரிப்பதற்காக காவல் துறை வசம்ஒப்படைக்குமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டால் தனது உயிருக்கு ஆபத்து என்ற பாண்டியனின் கருத்தை மறுத்த அரசுவழக்கறிஞர் பாண்டியராஜன், விசாரணைக்காக அவரை காவல்துறை வசம் ஒப்படைக்க வலியுறுத்தினார். மேலும்,கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பாண்டியனை காவல்துறை வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவிக்கும்பாண்டியனின் மனைவி கருத்தும் ஏற்கத்தக்கதல்ல என்றார்.

முன்னதாக, வழக்கு விசாரணைக்காக, வேலூர் மத்திய சிறையிலிருந்து, மிசா. பாண்டியன், மதுரைக்குக் கொண்டுவரப்பட்டார்.

தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் பாண்டியன்,செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன் 50நாட்கள் தலைமறைவாக இருந்தார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+