கும்பமேளா .. 3 கோடி பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்
கும்பநகர்:
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் புதன்கிழமை 3 கோடி பக்தர்கள் அமாவாசை தினத்தை முன்னிட்டு புனித நீராடுவார்கள்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறும்.
அடுத்த மாதம் வரை நடைபெறும் இந்தக் கும்பமேளா நிகழ்ச்சியையொட்டி திரிவேணி சங்கமத்தில் நீராடினால் பாவங்கள் போகும் என்பதும்,மறுபிறவி இல்லை என்பதும் ஐதீகம்.
அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் நீராடினால் மேலும் புண்ணியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவின் பல நகரங்களிலிருந்துமட்டுமின்றி உலகின் பல நகரங்களிலிலுமிருந்து பக்தர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக மாநில அரசு பல்வேறு போக்குவரத்துவசதிகளையும் செய்து வருகிறது.
அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடக்காத வண்ணம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து நெருக்கடியைச்சமாளிப்பதற்காக நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications