தமிழுக்குத் தொண்டாற்றினால் விருது
சென்னை:
ஒருவருக்கு தமிழறிஞர் விருது வழங்கப்படும்போது அவர் தமிழக்கு ஆற்றிய தொண்டு மட்டும்தான் கணக்கில் கொள்ளப்படும். அவர் தமிழ் நாட்டைச்சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ் பண்பாடு மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் சட்டசபையில்செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பிற மாநிலங்களில் வாழும் தமிழ் அறிஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது மற்றும் உதவித்தொகை வழங்குவது குறித்து தி.மு.கஎம்.எல்.ஏ.சட்டசபையில் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் தமிழ்க்குடிமகன் பதிலளித்துப் பேசியதாவது:
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் உள்ள தமிழறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு விருதும், உதவித்தொகையும் வழங்கப்பட்டுவருகிறது.
விருது பெறுபவர்களின் தகுதியும், தமிழ்த் தொண்டும்தான் பார்க்கப்படுகிறதே தவிர, அவர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றுகட்டுப்பாடு எதுவும் கிடையாது.
கடந்த 98 ம் ஆண்டு கோலாலம்பூரைச் சேர்ந்த முரசுநெடுமாறனுக்கு பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது. புதுவை, சுவிட்சர்லாந்த், பரோடா, மும்பை,டில்லி, கர்நாடகா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 19 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. அதாவது எங்கெங்கு சிறந்த கலைஞர்கள்இருக்கிறார்களோ, அவர்களை அரசு சிறப்பு செய்கிறது என்றார் தமிழ்க்குடிமகன்.












Click it and Unblock the Notifications