சட்டசபையை களங்கப்படுத்த வேண்டாம் .. சபாநாயகர்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டு, தனக்கு பேசவாய்ப்பளிக்கவில்லை என்றும், ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியிருப்பது என்னைவேதனையடைய வைக்கிறது என்று சபாநாயகர் பழனிவேல்ராஜன் தெரிவித்தார்.
சட்டசபையில் செவ்வாய்க்கிழமை கேள்விநேரம் முடிந்ததும் சபாநாயகர் பழனிவேல்ராஜன் ஒரு அறிக்கைவெளியிட்டார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
த.மா.கா.எம்.எல்.ஏ. ஞானசேகரன் சட்டசபையில் திங்கள்கிழமை சுமார் 22 நிமிடங்களுக்கு மேல் பேசிவிட்டுதனக்கு சபையில் பேச அனுமதியளிக்கவில்லை என்று கூறியிருப்பது தவறு. அவர் பேசிவிட்டு துணைசபாநாயகருடன் தகராறு செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.
அதுமட்டுமன்றி பல குற்றச்சாட்டுக்களைக் கூறி ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது என்று புகார் கூறிவருகிறார். பத்திரிக்கைக்காரர்களிடம் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது என்றும் பேட்டி கொடுத்துள்ளார்.
இது தவறு. அவர் ஏற்கனவே 22 நிமிடங்கள் பேசிவிட்டு பேசுவதற்கு அனுமதி தரவில்லை என்று கூறுவது தவறு.இது சட்டசபையின் கடைசிக் கூட்டத்தொடர். அதனால் அவரைப் போல் நானும் வேகம் காட்ட விரும்பவில்லை.
பொதுவாக அரசின் மேல் உள்ள குறைகளைத் தடுப்பதற்காக சபாநாயகர் பதவி வழங்கப்படவில்லை. பேரவைக்குயாரும் களங்கம் கற்பிக்க முயற்சிக்கக் கூடாது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பழனிவேல்ராஜன்.












Click it and Unblock the Notifications