2001-ல் ஒரு சுதந்திரப் போராட்டம்
ஈரோடு:
இரண்டாவது சுதந்திரப் போராட்டம் 2001 என்ற தலைப்பில், இந்தியாவை திருத்தக் கோரும் கோரிக்கைகள் அடங்கிய இன்டர்நெட் தளம்துவங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோட்டைச் சேர்ந்த ஜனநாயகப் பாதுகாப்பு குழு என்ற அமைப்பின் அமைப்பாளர் நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
புதிதாக ஒரு வெப்தளம் துவக்கியுள்ளோம். இதில் புதிய சுதந்திரப் போராட்டம் குறித்த கருத்துக்கள் அடங்கியுள்ளன. மொத்தம் 42 கோரிக்கைகள்இடம் பெற்றுள்ளன. இந்தக் கோரிக்கைகளில் எங்கள் எண்ணங்களை வெளியிட்டுள்ளோம். தற்போதுள்ள இந்தியாவின் நிலையை மாற்ற இன்னும் ஒருசுதந்திரப் போராட்டம் ஏற்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இதில் அரசியல்வாதிகள் பொதுப்பணத்தை எப்படியெல்லாம் சீரழிக்கிறார்கள் என்பதை விளக்கியுள்ளோம். அரசு நிர்வாகம் எவ்வளவு மோசமாகநடக்கிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளோம். பொதுமக்களின் நிலை என்ன என்பதும் கூறப்பட்டுள்ளது. எனவே இது குறித்த கருத்துக்களை அறியவேஇந்த வெப் தளத்தை உருவாக்கியுள்ளோம்.
இதன்படி கிடைக்கும் கருத்துக் கணிப்பை அறிந்து வரும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இதனை முன் வைத்து ஈரோடு தொகுதியிலும்,வி.ஐ.பிக்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் ஒரு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications