3-வது அணி .. தடுக்க கோருகிறார் திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மூன்றாவது அணி உருவாவதை தடுக்குமாறு மூப்பனாருக்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாமக, பாஜக தவிர்த்து நீதிக்கட்சி, புதிய தமிழகம், ராஜீவ்காங்கிரஸ் ஆகிய கட்சிகளை அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 80 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் 30,000 முதல் 40,000 வரை வாக்குகள் பெறும் எனகண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தாழ்த்தப்பட்டோர் வாக்களிக்க தகுந்த பாதுகாப்புஅளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்னும் பல மாவட்டங்களில் இரட்டை குவளை முறை, இடுகாட்டுப் பிரச்சினை, தாழ்த்தப்பட்டோரைகோவிலுக்குள் அனுமதிக்க மறுத்தல் போன்றவை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications