வீரப்பனின் கேசட்டைக் கொடுத்தவர் கைது
கடலூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பன் பிடியிலிருந்தபோது வீரப்பன் அனுப்பிய கேசட்டைக் கொண்டு வந்துகொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதமே கைது செய்யப்பட்ட இவரைப் போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திவருகிறார்கள். இதுதவிர நக்சலைட்டுக்கள் 6 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் விடுவித்த பிறகு தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படைப் போலீஸார் வீரப்பன்பதுங்கியுள்ள காட்டுப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீரப்பனுக்குத் தகவல் கொடுப்பவர்களைப் போலீஸார் ரகசியமாகக் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில்வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கும் முக்கியத் தூதராக செயல்பட்டு வரும் நபரைப் போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர் பெயர் கோவிந்தராஜ். இவரைக் க்யூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக அரசுக்கு கடலூர் வழியாகத்தான் வீரப்பன் முதன்முதலாகக் கேசட் அனுப்பினான். இந்தக் கேசட் யார்மூலமாக வந்தது என்பது மிகவும் மர்மமாக இருந்தது. இந்த மர்மங்களுக்குத் தற்போது விடை கிடைத்துள்ளது.கோவிந்தராஜ்தான், வீரப்பன் கொடுக்கும் கேசட்டுக்களைக் தமிழக, கர்நாடக அரசுகளுக்குக் கொண்டு வந்துகொடுத்தார் என்று இப்போது தெரிய வந்துள்ளது.
கோவிந்தராஜ், தமிழ்நாடு விடுதலைப்படையின் முக்கியத் தூதர். காட்டிலுள்ள வீரப்பன் மற்றும் நக்சலைட்டுக்கள்கும்பலுக்குத் தேவையான பணம், ஆயுதம் மற்றும் உணவுப்பொருட்கள் இவரது ஏற்பாட்டின்படி கைமாறியுள்ளது.
ஆனால் இவர் இதுவரை காட்டுக்குச் செல்லவில்லை என்றும், காட்டிலிருந்து வேறொருவர் மூலமாக இவருக்குஉத்தரவு வந்ததாகவும், உத்தரவை ஏற்றுக் கொண்டு அவர் செயல்பட்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் 16 ம் தேதியே கைது செய்யப்பட்ட இவரிடம் ரகசிய இடத்தில் வைத்துப் போலீஸார் விசாரணைநடத்தி வருகிறார்கள். இவரை நன்கு விசாரித்தால் வீரப்பனின் இருப்பிடம் பற்றித் தெரியவரக் கூடும் என்றும்தெரிகிறது.
மேலும் தமிழர் விடுதலைப்படை அமைப்பிலிருந்து சமீபத்தில் விலகிய ஆலப்பாக்கம் முருகேசன், வீரப்பனுடன்இணைய முயற்சித்திருக்கிறார். அவர் உள்பட 6 நக்சலைட்டுக்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications