இந்திய கிரிக்கெட் கேப்டன் கங்குலிக்கு பத்மஸ்ரீ விருது
Subscribe to Oneindia Tamil
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் சிறப்பான ஆட்டத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ விருதுவழங்கப்படுகிறது.
இந்த விருது வரும் 26 ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் கங்குலிக்குக் வழங்கப்படும். ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் அவருக்கு விருதுவழங்குவார்.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கிரிக்கெட் சூதாட்டம் காரணமாக கடந்த ஆண்டு கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் அரசு விருதுவழங்கப்படவில்லை.
இந்த நிலையில் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர் அர்ஜூனா விருதைப் பெற்றுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications