படகு கவிழ்ந்ததில் 5 பக்தர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
பாஹ் (பிகார்):
பிகார் மாநிலம் சாம்ப்பரான் மாவட்டத்திலுள்ள வால்மிகிநகரில் உள்ள ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 5 பக்தர்கள்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இச்சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் நடந்தது. கோவில் ஒன்றில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக 12க்கும் மேற்பட்டோர் படகில் சென்றனர். அப்போது படகு திடீரென்று கவிழ்ந்ததில் இந்த விபத்து நடந்தது.
இறந்தவர்களில் 3 பேர் குழந்தைகள். இரண்டு பேர் பெண்கள். படகு ஆற்றில் கவிழந்தபோது பிற பக்தர்கள்ஆற்றில் நீந்திக் கரையை அடைந்து விட்டனர்.
படகு கவிழ்ந்த சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications