For Daily Alerts
Just In
படகு கவிழ்ந்ததில் 5 பக்தர்கள் சாவு
பாஹ் (பிகார்):
பிகார் மாநிலம் சாம்ப்பரான் மாவட்டத்திலுள்ள வால்மிகிநகரில் உள்ள ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 5 பக்தர்கள்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இச்சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் நடந்தது. கோவில் ஒன்றில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக 12க்கும் மேற்பட்டோர் படகில் சென்றனர். அப்போது படகு திடீரென்று கவிழ்ந்ததில் இந்த விபத்து நடந்தது.
இறந்தவர்களில் 3 பேர் குழந்தைகள். இரண்டு பேர் பெண்கள். படகு ஆற்றில் கவிழந்தபோது பிற பக்தர்கள்ஆற்றில் நீந்திக் கரையை அடைந்து விட்டனர்.
படகு கவிழ்ந்த சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, January 25, 2001, 5:30 [IST]