ஹெராயின் பறிமுதல் ... விசாரணை கோருகிறது த.மா.கா.
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சென்னையில் உள்ள பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகையில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட ரூ 2 கோடி ஹெராயின் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் பாண்டிச்சேரி பிரிவு வற்புறுத்தியுள்ளது.
பாண்டிச்சேரி பிரிவு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். இதையடுத்து த.மா.கா.செய்தித்தொடர்பாளர் வி.பாலன் நிருபர்களிடம்கூறுகையில்,
பாண்டிச்சேரியில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் போது, உள்ளாட்சித் தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டும். சென்னையில் உள்ள பாண்டிச்சேரி விருந்தினர்மாளிகையில் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என தீர்மானங்கள் எடுக்கப்பட்டது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications