கேரளாவிலிருந்து ஹஜ் பயணிகள் மெக்கா பயணம்

Subscribe to Oneindia Tamil

துபாய்:

முஸ்லீம்களின் புனித ஸ்தலமான மெக்காவுக்கு, முதல்கட்டமாக கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஹஜ் யாத்திரிகர்கள் தொழுகை நடத்துவதற்காகசென்றுள்ளனர்.

அவர்கள் குடியரசு தினமான வெள்ளிக்கிழமை ஜெட்டா நகர் செல்வார்கள்.

இதுகுறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக, இந்தியாவிலிருந்து ஜெட்டா வரும்பயணிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகின்றன.

இந்த வருடம் 1,20, 000 முஸ்லீம் யாத்திரிகர்கள் ஹஜ் பயணமாக ஜெட்டா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ஹஜ் கமிட்டியின் சார்பில் 72,000 பேருக்கு தொழுகை நடத்த ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.

இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்திரிகர்கள் ஜெட்டா வருவதற்காக 247 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இவற்றில் 178 ஏர் இந்தியாவிமானங்களும், 69 சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானங்களும் அடங்கும். இந்த வருடம் ஹைதராபாத்திலிருந்தும் முஸ்லீம் ஹஜ் பயணிகள் ஜெட்டாவருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெக்காவில் ஹஜ் பயணிகள் தங்குவதற்காக 301 கட்டிடங்கள் வாடகைக்கு வாங்கப்பட்டிருக்கின்றன. இந்திய அரசு 370 க்கும் மேற்பட்டடாக்டர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை அனுப்ப இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. ஹஜ் யாத்திரிகர்களின் நலனிற்காக அவர்கள் செயல்படுவார்கள்என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+