மூப்பானார் - சோ சந்திப்பு
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மூப்பனாரை, துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் சோ சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் சோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பானாரை புதன்கிழமை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.அ.தி.மு.க.வுடனானகூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பு 1 மணி நேரம் நடந்தது.
சோவுடன் நிகழ்ந்த சந்திப்பு குறித்து நிருபர்களிடம் மூப்பனார் கூறியதாவது:
சோ எனது நீண்ட கால நண்பர். அந்த முறையில் நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசுவது உண்டு. எங்கள் சந்திப்பில் நாங்கள் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.பொங்கல் விழாவிற்கு எந்த கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது என்பது குறித்து மாநில நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
மூன்றாவது அணி அமைப்பது குறித்து சோனியா காந்தியை சந்தித்து பேச இருப்பதாக சண்முகம் கூறியிருக்கிறார். அதற்கு நானா அனுமதி வாங்கி கொடுக்கமுடியும். அ.தி.மு.க.வுடன் எப்போது கூட்டணி என்பது குறித்து எஸ்.ஆர். பாலசுப்ரமணியிடம் கேளுங்கள் என கூறினார்.