புலிகள் சண்டைநிறுத்த நீட்டிப்பை வரவேற்கிறார் நெடுமாறன்
பாண்டிச்சேரி:விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்தை தமிழ் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன்வரவேற்றுள்ளார்.
இலங்கையில் பல ஆண்டுகளாக இனக் கலவரம் நடந்து வருகிறது. நார்வே குழுவினர் விடுதலைப் புலிகளுக்கும்,இலங்கை அரசுக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்தும் ஈடுபடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் 1 மாதம் சண்டை நிறுத்தம் அறிவித்திருந்தனர். அந்த 1 மாத சண்டை நிறுத்தம்புதன்கிழமையுடன் முடிவடைந்தது.
விடுதலை புலிகள் மேலும் 1 மாதம் சண்டை நிறுத்தத்தை நீடித்துள்ளனர். இதை தமிழ் தேசிய இயக்க தலைவர்நெடுமாறன் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டியில் கூறியதாவது:
விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள சண்டை நிறுத்த நீடிப்பு இலங்கை இனப் பிரச்சனையை அமைதிபேச்சு வார்த்தைமூலம் விடுதலைப் புலிகள் தீர்த்துக் கொள்ள விரும்புவதை காட்டுகிறது.
இந்திய அரசு காஷ்மீரில் அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்தை ஆதரிக்கும் இந்திய பத்திரிக்கைகள் விடுதலைபுலிகள் அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்திற்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த சண்டை நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இந்திய அரசு உள்பட அனைத்துநாடுகளும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications