போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தங்களது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் புதன்கிழமைகைது செய்யப்பட்டனர்.
சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் போன்ற10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் பனகல் மாளிகை முன்பு சத்துணவு ஊழியர்கள சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்ட 147 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கோயம்புத்தூரில் மாவட்ட செயலாளர் இன்னாசி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரும்,மேலும் புறநகர் பகுதிகளான அவிநாசியில் 145 பேரும், மேட்டுப்பாளையத்தில் 53 பேரும், உடுமலையில் 40பேரும், பொள்ளாச்சியில் 31 பேரும், திருப்பூரில் 86 பேரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications