அ.தி.மு.க வை ஆதரித்தால் அபாயம்... அன்பழகன்
சென்னை:
வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க வை ஆட்சி பீடத்தில் அமர வைக்கும் முயற்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் செயல்பட்டு வருவது, லஞ்ச ஊழலைஊக்குவிப்பது மட்டுமன்றி தமிழக மக்களையே படுகுழியில் தள்ளுவது போன்ற அபாயகரமான செயலாகும் என்று கல்வி அமைச்சர் அன்பழகன்சட்டசபையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
சட்டசபையில் வியாழக்கிழமை கல்வி அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமின்றி, கட்சியில் இருந்த மாஜி எம்.எல்.ஏ.க்கள் பலர் இன்று கோர்ட்டுக்கும், வீட்டுக்குமாகஅலைந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது அனைவர் பெயரிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அ.தி.மு.க.வுக்கு வெளிப்படையாகவே தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த முறைஅ.தி.மு.க.வையே ஆட்சிபீடத்தில் ஏற்ற வேண்டும் என்பதையே தனது குறிக்கோளகக் கொண்டு செயல்படுகிறது த.மா.கா.
த.மா.கா. ஆட்சியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படக் கூடாது. தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.
மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு த.மா.கா. முடிவெடுக்க வேண்டும். ஆனால் இப்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவளித்து விட்டு பின்னால்வருத்தப்படக் கூடாது. ஊழல் மிகுந்த கட்சியை ஆட்சியில் அமர வைக்கக த.மா.கா.முயலக் கூடாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு த.மா.கா.கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 1996 ம் ஆண்டு தி.மு.க.ஆட்சிக்கு வந்தபிறகு ஊழலில்லாத ஆட்சியை கொடுத்து வருகிறது. இன்று மட்டுமல்ல எப்போதும் தி.மு.க.ஊழலைஎதிர்த்துக் குரல் கொடுக்கும் என்றார் அன்பழகன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications