விரைவில் இந்தியா - வங்கதேசம் இடையே ரயில்
டாக்கா:
இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே விரைவில் பயணிகள் ரயில் விடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வங்கதேச தகவல்தொடர்புத்துறைஅமைச்சர் அன்வர் ஹோசைய்ன் மோன்ஜோ வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கும், வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கும் செல்லும் பயணிகளின்எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இவர்கள் போதுமான ரயில்போக்குவரத்து வசதி இல்லை. இதனால் இரு நாட்டுப் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதைத் தவிர்க்கும்வகையில், இந்திய அரசும், வங்கதேச அரசும் பயணிகள் ரயில்விடத் தீர்மானித்துள்ளோம்.
இந்தியா மட்டுமின்றி வங்தேசத்திலிருந்து சர்வதேச நாடுகளுக்கும் ரயில் விடவும் வங்கதேசம் ஆலோசித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ரயில்தொடர்பை ஏற்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications