வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

தமிழக, கர்நாடக அரசுகள் வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்க தயாராக இருந்தால் தான் மீண்டும்வீரப்பனிடம் தூதுவராக செல்ல தயாராக இருப்பதாக தமிழ் தேசிய இயக்க தலைவர் நெடுமாறன்தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வீரப்பன் விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையல்ல. இந்த பிரச்சனை சமூக- பொருளாதார கண்ணோட்டத்தில்பார்க்கப்பட வேண்டும்.

சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் வாழும் மலைசாதியினரும், ஏழை கிராம மக்களும் கடந்த 8 ஆண்டுகளாககஷ்டப்பட்டு வருகிறார்கள். இதுவரை வீரப்பனை பிடிக்க ரூ 170 கோடிவரை செலவிடப்பட்டுள்ளது.அதிரடிப்படையின் நடவடிக்கை தொடர்ந்து வருவதால் மேலும் பணம் செலவாகி வருகிறது.

சம்பல் கொள்ளைக்காரி பூலான் தேவிக்கு பொது மன்னிப்பு வழங்கியது போல் வீரப்பனுக்கும் பொது மன்னிப்புவழங்க வேண்டும்.

தமிழக, கர்நாடக அரசுகள் இது குறித்து பரிசீலிக்குமானால் வீரப்பனை சந்தித்து சரணடைய வைக்க முயற்சிகள்மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.ஆனால் இது அனைத்தும் உடனடியாக நடக்கக்கூடியது அல்ல.

மக்கள் மத்தியிலும் வீரப்பனுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணம் நிலவி வருகிறது.

தற்போது நடந்து வரும் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.குறைந்சபட்சம் பத்திரிக்கையாளர்களாவாது அந்த பகுதிகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

அதிரடிப்படையினரின் நடவடிக்கையால் அந்த பகுதியில் வாழும் மலைசாதியினர் தங்கள் தினசரி வாழக்கைக்காகபணம் சம்பாதிக்கக்கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். அதிரடிப்படையின் நடவடிக்கை முடியும் வரை அரசுஅவர்களுக்கு பண உதவி செய்ய வேண்டும். இது பட்டினிச்சாவுகளை தடுக்க உதவும்.

அதிரடி படையினரால் நடந்த முறைகேடுகள் குறித்து தமிழக, கர்நாடக அரசுகள் இணைந்து விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+