சண்டை நிறுத்த நீட்டிப்பு ... பாக்.முன்னாள் பிரதமர் பாராட்டு
இஸ்லாமாபாத்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சண்டைநிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியது வரவேற்கத்தக்கது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்அப்துல் கயாம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இவர் பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக இருந்தவர். இதுகுறித்து வியாழக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தும் வகையிலும், பிரச்சனையைத் தீர்க்கும் வகையிலும் அறிவிக்கப்பட்ட சண்டைநிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்குநீட்டித்துள்ளார் இந்திய பிரதமர் வாஜ்பாய். சண்டைநிறுத்த நீட்டிப்பை நாம் வரவேற்றே தீர வேண்டும்.
காஷ்மீரில் உள்ள சில தீவிரவாத அமைப்புக்களும், வேறு சிலரும் சண்டைநிறுத்த நீட்டிப்பை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.அவர்கள் மேலும், மேலும் காஷ்மீர் மக்கள் கொலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களா?
மேலும் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப், காஷ்மீரில் உள்ள தற்போதைய நிலையைப் புரிந்து கொண்டு காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க முன்வரவேண்டும். காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஆயத்தங்களில் அவர் இறங்க வேண்டும்.
மேலும் இந்திய அரசு, ஹூரியத் மாநாட்டுக் கட்சியினர் பாகிஸ்தான் செல்வதற்குத் தடை விதிக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
யு.என்.ஐ.