ஆதரவு வாபஸ் .. வாஜ்பாய்க்கு எச்சரிக்கை
புதுடெல்லி:
மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும் என தேசிய மாநாட்டுக்கட்சி வாஜ் பாய் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அலகாபாத்தில் நடைபெற்ற துறவியர் மாநாட்டில் அடுத்த ஆண்டு ராமர் கோவில் கட்டப்படும் என எடுக்கப்பட்ட முடிவை வாஜ்பாய் அரசுகண்டிக்காவிட்டால் அவருடைய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என காஷ்மீர் மாநில முதல்வரின் மகனும் மத்திய மந்திரியுமானஉமர் அப்துல்லா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் இதனை ஆதரிக்குமா எனக் கேட்டதற்கு இது தேசிய மாநாட்டுக் கட்சியின் முடிவாகும்என்றார்.
இப்பேட்டியின் போது உடனிருந்த மணிசங்கர ஐயர்(இ.காங்), நிலோத்பல் பாசு (இ.கம்யூ) ஆகியோர், அயோத்தி பிரச்சனை நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது துறவியர் மாநாடு இவ்வாறு முடிவு எடுத்திருப்பதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications