தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நிலநடுக்கம்
டெல்லி:
இந்தியாவின் 52 வது குடியரசு தினமான வெள்ளிக்கிழமை தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நிலடுக்கம்ஏற்பட்டது.
குஜராத், மகாராஷ்டிரா, கோவா உள்பட தென் மற்றும் மேற்கிந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
குஜராத் மாநிலத்தில் காலை 8.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது இம்மாநிலத்தில் இந்தியா -பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள கட்ச் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலடுக்கம் சில நிமிடங்கள் நீடித்தது. தலைநகர் காந்திநகரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பல வீடுகள்சரிந்து விழுந்தன. இதனால் தகவல் தொடர்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.ஆனால் நிலநடுக்கத்தால் குஜராத் மாநிலத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அகமதாபாத்திலுள்ள யூ.என்.ஐ. செய்தி நிறுவனம் இயங்கி வரும் கட்டிடத்தில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம்ஒன்றில் நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டது. மேலும் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளத்திலும்நிலநடுக்கம் ஏற்பட்டது.
குஜராத் தவிர, மகாராஷ்டிரா, ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு,பாண்டிச்சேரியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோவா தலைநகர் பனாஜியில் காலை 8.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிர்ச்சேதம் ஏற்பட்டது. நிலநடுக்கம்6.9 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டது.
மும்பையில் நிலநடுக்கம்:
மும்பையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 8.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து விவரங்கள் எதுவும் உடனடியாகத்தெரியவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வீடுகளிலிருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி ஓட ஆரம்பித்தனர்.இதனால் வீடுகளிலிருந்த பீரோ, கட்டில்கள், மரச்சாமான்கள் ஆகியவை கீழே உருண்டு விழுந்தன. மேலும் வீட்டுக்கதவுகள், ஜன்னல்கள் நொறுங்கின.
மும்பையில் காலை 8.45 5.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை.இந்தியாவின் 52 வது குடியரசுதினமான வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களைஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கவர்னர் அலெக்சாண்டர் முன்னிலையில் குடியரசு தின விழா நடந்து கொண்டிருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டது.அதிர்ஷ்டவசமாக குடியரசு தின விழா அணிவகுப்பு நடந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரியஅளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
யு.என்.ஐ.