நிலநடுக்கம் ... அவசரமாகக் கூடுகிறது அமைச்சரவை
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 220 க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவத்தையடுத்து பிரதமர் வாஜ்பாய் மத்திய அமைச்சரவைக்கூட்டத்தை வெள்ளிக்கிழமை மாலை அவசரமாகக் கூட்டியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் ரேஸ்கோர்ஸ் ரோட்டிலுள்ள பிரதமர் இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டம் மாலை 5 மணிக்கு அவசரமாகக் கூடுகிறது.
கூட்டத்தில் குஜராத் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்தும், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்துவிவாதிக்கப்படும்.
முன்னதாக, இந்தியாவின் 52 வது குடியரசு தினமான வெள்ளிக்கிழமை குஜராத், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, பஞ்சாப்,ராஜஸ்தான், ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மட்டும் 220 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக் கூடும் என்றும், சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுவது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications