For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் களத்தில் விழிப்புணர்வு இயக்கத் தலைவர்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

என்னிடம் வருவோர் அனைவரும் நீங்கள் படித்தவர், தேர்தலில் போட்டியிடக் கூடாத எனக் கேட்கின்றனர்.எனவே வரும் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் ம. நடராஜன்கூறினார்.

கோவையில் நடராஜன் தொகுத்து வெளியிட்ட பேரறிஞர் அண்ணாவின் பேருரைகள் என்ற நூல் அறிக விழாநடந்தது. இதில் கலந்து கொண்ட நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளேன். என்னிடம் வருவோர்எல்லோரும் படித்தவர் நீங்கள், தேர்தலில் போட்டியிடக் கூடாதா எனக் கேட்கின்றனர். எனவே வரும் தேர்தலில்போட்டியிட முடிவு செய்துள்ளேன்.

எந்தக் கட்சியின் சார்பிலும் போட்டியிட மாட்டேன். எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என இப்போதுகூறினால் அது பத்திரிக்கைகளில் வெளியாகும். பின்னர், அந்த செய்தி போலீசாருக்கும் முதல்வருக்கும் தெரியவரும். எனவே தேர்தலில் போட்டியிடா வண்ணம் சதித் திட்டம் நடக்கும்.

எனக்கும் அ.தி.மு.க.வுக்கும் நேரடியாகவோ மறைகமாகவோ எந்த தொடர்பும் இல்லை. மறைமுகத் தொடர்புஇருப்பதாக பத்திரிக்கைகள் தான் எழுதி வருகின்றன. எனக்கு எல்லாக் கட்சியிலும், எல்லா ஊர்களிலும் நண்பர்கள்இருக்கின்றனர்.

பா.ஜ. காவிலும், காங்கிரஸ் கட்சியிலும் கூட நண்பர்கள் நிறையவே உண்டு. நான் எல்லா இடங்களிலும்வியாபித்திருக்கிறேன். என்னையாராலும் கட்டுப்படுத்த முடியாது என்றார். அப்போ நீங்கள் கடவுளா என ஒருநிருபர் கேட்டதற்கு சிரிப்பை மட்டுமே பதிலாக உதிர்த்தார் நடராஜன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X