தலைநகரில் குடியரசு தின கோலாகலம்
டெல்லி:
இந்தியாவின் பாரம்பரியத்தையும், திறமையையும் பறைசாற்றும் விதமாக இரண்டு மணி நேர குடியரசு தினம் கோலாகலமாக தலைநகரில் நடந்தேறியது.
சுமார் 65 ஆயிரம் பாதுகாவலர்கள் உள்பட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் உதவியுடன் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காலை 10 மணிக்குத் துவங்கிய முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட்ட ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், முன்னதாக 21 குண்டுகள் முழங்கவரவேற்கப்பட்டார்.
சிறப்பு விருந்தினர்:
அல்ஜீரீய அதிபர் அப்தேல் அஜீஸ் பூட்ஃபிலிகா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முதன்முறையாக ஒரு அரபு நாட்டு அதிபருக்கு இச்சிறப்புஅளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பிரதமர் வாஜ்பாய், துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்த், அல்ஜீரீய அதிபர் உள்பட இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த விருந்தினர்களை பாதுகாப்புஅமைச்சர், மற்றும் முப்படைத் தலைவர்கள் வரவேற்றனர்.
டெல்லி பிரதேச ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் வினோத் பானோ தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது.
குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீரச்செயல்களுக்கான விருது பெற்ற குழந்தைகள் யானையின் மீது ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
தீவிரவாதிகளின் மிரட்டலையும், கடும்பனியையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டுகலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர். நாட்டின் பல பகுதிகளிலும் குடியரசு தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
காஷ்மீரில் குடியரசு தினவிழா:
காஷ்மீரில் கடும் பாதுகாப்புக்கிடையே நடைபெற்ற குடியரசு தின விழாவில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஆளுநர் ஜி.சி.சக்சேனா,கொடியேற்றி வைத்தார். முதல்வர் பரூக் அப்துல்லா உள்பட அமைச்சர்கள் மற்றும், அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ..
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஆளுநர் பாத்திமா பீவி, கொடியேற்றி வைத்தார். முதல்வர்கருணாநிதி இவ்விழாவில் அண்ணா விருது மற்றும் வீரதீரச்செயல்களுக்கான விருதுகளை வழங்கினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications