மூப்பனார் தலைமையில் தமிழக ஜனநாயகக் கட்சி?
சேலம்:
தமிழக ஜனநாயகக் கட்சிக்கு மூப்பனார் தலைமை வகிப்பார் என்று புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்வெள்ளிக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
சேலத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
முதல் கட்டமாக நாங்கள் 3 வது அணியை அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணியில் முதலில் கொங்கு நாடு மக்கள்கட்சி, தாயக மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. 2 வது கட்டமாக த.மா.கா தலைவர் மூப்பனாரைத்தலைமை தாங்க அழைப்பு விடுத்துள்ளேன்.
முதல் முறையாக அவரைச் சந்தித்தபோது ஆதரவளிப்பதாக ஒப்புக் கொண்டார். அவர் 75 சதவீதம் எங்கள்அணிக்கு வந்து விடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது குறித்து மற்ற கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைசெய்து விட்டு முடிவு எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவரது பதில் எனக்குத் திருப்திகரமாக இருந்தது. இதையடுத்து நாங்கள் 3வது அணி அமைக்கும் முயற்சியில்தீவிரமாக ஈடுபட்டுள்ளளோம். 3 வது அணியின் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். இந்தஅணி ஏற்பட்டவுடன் இந்த தலைமைப் பொறுப்பை மூப்பனாரிடம் அளிப்பேன்.
மக்கள் தமிழ்தேசத்தின் கட்சி அலுவலகத்தில் கண்ணப்பனைச் சந்தித்துப்பேசினேன். அவரும் எங்களுடன் அணிசேருவார் என நம்புகிறேன். அவர் இந்த அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். புரட்சித் தலைவர் அ.தி.மு.கதலைவர்களையும் சந்தித்துப் பேசவிருக்கிறேன்.
தேர்தலுக்குப் பிறகு சாதிக் கட்சிகள் காணமல் போய்விடும் என அ.தி.மு.க, பொதுச் செயலர் ஜெயலலிதாதெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு காணமல் போவது ஜாதிக் கட்சிகளா அல்லது பிரதான அரசியல் கட்சிகளாஎன்பது தேர்தல் நேரத்தில் தெரியவரும்.
தமிழக ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தால் மூப்பனாரை முதல்வராக்குவோம். அவர் எப்போது எங்கள்அணிக்கு வந்தாலும், நாங்கள் அவருக்கு தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். புதியநீதிக் கட்சி தமிழகத்தில் இன்னும் 30 தொகுதிகளில் மாநாடு நடத்தவுள்ளது. இதனையடுத்து பிப்ரவரி 25ம் தேதிசென்னையில் மாநாடு நடத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications