அரசியல் சட்டத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்
சென்னை:
அரசியலமைப்பு திட்டத்தை மறுபரிசீலனை செய்வதில் தவறில்லை என தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
இந்திய குடியரசு தின பொன் விழா முன்னிட்டு ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கும் த.ரா.கா. தலைமையகத்தில் கொடியேற்றி வைத்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:
குடிரயரசு தின பொன்விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் தடுமாறுகின்றன. இந்தியாசிறந்த ஜனநாயக நாடாக திகழ்ந்து வருகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மறு பரிசீலனை செய்யவது குறித்து ஜனாதிபதி தனது குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அரசியலமைப்பு திட்டத்துக்கு 122 திருத்தங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டுவருவதில் தவறு கிடையாது.
இந்த அடிப்படையில் தான் பிரதமர் ஒரு குழுவினை அமைத்துள்ளார்.இந்த குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைககளிலும் விவாதிக்கப்பட்டுஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பு தான் நிறைவேற்றப்பட இருக்கிறது என கூறினார்.