For Daily Alerts
Just In
குஜராத்துக்கு ம.தி.மு.க. நிவாரணநிதி
மதுரை: மறுமலர்சி திராவிட முன்னேற்ற கழகம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு நிவாரண பணிகளுக்காக ரூ 5லட்சம் நிதி வழங்குகிறது
வெள்ளிக்கிழமை இந்தியாவின் பல பகுதிகளிலும் பூகம்பம் ஏற்பட்டது இதில் குஜராத் மாநிலம் பெரிதும்பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு நிவாரண உதவிக்காக ம.தி.மு.க.சார்பில் ரூ 5 லட்சம்வழங்குகிறது.
இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ம.தி.மு.க.சார்பில் அனுப்பப்படும்நிவாரண நிதி காசோலை மூலமாகவோ அல்லது டிமான்ட் டிராப்ட் மூலமாகவோ குஜராத் முதல்வருக்கு அனுப்பிவைக்கப்படும்.
பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளது மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால் அதேசமயம் நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் மக்களும் உதவ முன் வந்துள்ளது மனதிற்கு ஆறுதலளிப்பதுபோலுள்ளது என்றார் வைகோ.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, March 22, 2008, 11:47 [IST]