மேலும் 2 மீட்பு விமானங்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

பூகம்ப மீட்புப் பணிகளுக்காக இரண்டு விமானங்களைக் கூடுதலாக குஜராத் மாநிலம் பூஜூக்கும்,அகமதாபாத்துக்கும் திங்கள்கிழமை முதல் இயக்கவுள்ளதாக இந்தியன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகியவை நிவாரண பொருட்களுடன் சிறப்புவிமானங்களை பூஜ் மற்றும் அகமதாபாத்துக்கு இயக்கி வருகின்றன.

இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் திங்கள்கிழமை முதல் கூடுதலாக இரண்டு விமானங்களை இயக்கி வருகிறது. ஒருவிமானம் மும்பையிலிருந்து 12.30 மணிக்கும், இன்னொன்று மாலை 5.45 மணிக்கும் குஜராத் மாநிலம் செல்கிறது.

இந்த விமானங்கள் மூலம் பூஜ் மற்றும் அகமதாபாத்தில் பூகம்பத்தால் காயமடைந்தவர்கள் மும்பை கொண்டுவரப்படுவார்கள்.

உலகம் முழுவதும் செயல்படும் ஏர் இந்தியா விமான அதிகாரிகளுக்கு நிவாரணப் பொருட்களை இலவசமாககுஜராத்துக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் ஜெட் ஏர்வேஸூம்நிவாரணப்பொருட்களை பூஜ் மற்றும் அகமதாபாத்துக்குக் கொண்டு செல்கின்றன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+