கடவுள் ஒரு தத்துவம் .. கூறுகிறார் அன்பழகன்
கோவை:
கடவுள் என்பது ஒரு தத்துவம், சிந்தனை தான். இறைவன் பெயராலும், மதத்தின் பெயராலும் மக்களைப் பிரிக்கக்கூடாது என கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
கோவையில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் மகன் ஜெயராஜின் திருமண விழாவில் கலந்துகொண்ட அன்பழகன் பேசியதாவது:
கொங்கு மண்டலத்தில் வைதீக முறைகள் பின்பற்றப்படுவது மிகவும் குறைவே. இதனால், இலக்கிய வளர்ச்சிஅதிகரித்துள்ளது. தமிழ் உணர்வு மக்களின் உரிமை.
சாதி சமய வேறுபாடுகள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும். ஆயிரம் பேரைச் சொல்லி ஆண்டவனைவழிபட்டாலும், வழிபடக் கூடியவரின் மனதில் அன்பு வேண்டும். அப்போது தான் வழிபாட்டில் பலனிருக்கும்.
கடவுள் என்பது ஒரு தத்துவம், சிந்தனை. இதைத்தான் பின் பற்ற வேண்டும். இறைவன் மற்றும் மதத்தின் பெயரால்,மக்களை பிரிக்கக் கூடாது.
இல்லற வாழ்க்கை தான் நிம்மதியைத் தரும். ஆனால், உலக வாழ்க்கை வெற்றி தோல்வி இரண்டையும் தரக் கூடியதுஎனப் பேசினார்.












Click it and Unblock the Notifications