இடைக்கால பட்ஜெட் .. இல்லத்தரசிகளுக்கு அதிக சலுகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அமைச்சரவையில் முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை தாக்கல் செய்தஇடைக்கால பட்ஜெட்டில், இல்லத்தரசிகளுக்கும், உழவர்களுக்கும்,வியாபாரிகளுக்கும் பல சலுகைகள் வழங்கியுள்ளார்.

2001-02-ம் ஆண்டுக்கான முதல் 6 மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கையை(இடைக்கால பட்ஜெட்) தமிழக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி திங்கள் கிழமைதாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் ரூ 996 கோடி பற்றாக்குறைஏற்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் ரூ 20,635 கோடி வரவும், ரூ 24,294 கோடி செலவும்காட்டப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையை சமர்பித்து முதல்வர் பேசுகையில், அபராத வட்டி மற்றும்கூட்டுறவு பயிர் கடன்களுக்குமான வட்டி இனி 1 சதவிகிதமாக இருக்கும்.

கூட்டுறவு வங்கிகள் அதிக காலமாக கட்டப்படாமல் இருக்கும் கடன்களுக்கானஅபராத வட்டியை 3 சதவிகிதத்திலிருந்து 1 சதவீதமாக குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஆண்டு ஜுன் மாதம் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வரும்.

தங்கள் விளை பொருட்களை விவசாய ஒழுங்கு முறை குழுவிற்கு கொண்டு வரும்விவசாயிகளுக்கு அதற்கான முழு பணமும் அன்றே வழங்கப்படும்.

டைடல் பார்க்கின் இரன்டாவது மென்பொருள் நிறுவனம் தரமணியில் 20 லட்சம் சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட இருக்கிறது என கூறினார்,

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+