இந்திய அணியில் மீண்டும் மோங்கியா
மும்பை:
கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் நயன் மோங்கியா மீண்டும் இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பைப்பெற்றுள்ளார்.
இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டித் தொடரை முன்னிட்டு சென்னையில் பிப்ரவரி 6 முதல் 11 வரையிலும் பின்பிப்ரவரி 16 முதல் 20 வரையிலும் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுழல் பந்துவீச்சிற்கு சாதகமான இந்திய மைதானங்களில் விளையாட முன்னணி சுழல் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே இல்லாத நிலையில் தேர்வுக்குழுவினர்அறிவித்துள்ள அணியில் 7 சுழல் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், எஸ்.ரமேஷ், எஸ்.எஸ்.தாஸ், வி.வி.எஸ்.லஷ்மணன், நயன் மோங்கியா, ஹேமங் பதானி, ஸ்ரீநாத், ஜாகீர்கான், அஜீத் அகர்கர், தேபஷிஷ் மொகந்தி, ஆஷிஷி நெஹ்ரா, வெங்கடேஷ் பிரசாத், சரண்தீப் சிங், டி.மோங்கியா, விஜய் தாஹியா, ராகுல் சிங்வி, எம்.கார்த்திக்,பாலாஜி ராவ், சுரீந்தர் சிங், ஹர்பஜன் சிங், வெங்கடபதி ராஜூ, சுனில் ஜோஷி மற்றும் முகம்மது கைஃப் ஆகிய 25 பேர் பயிற்சி முகாமிற்குதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications