மிஸ். இந்தியாவின் சோகம்
டெல்லி:
குஜராத்தை உலுக்கி எடுத்த பூகம்பம் தன்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக பெமினா மிஸ் இந்தியா செலினா ஜெட்லே ஞாயிற்றுக்கிழமைகூறினார்.
டெல்லியில் நிருபர்களிடம் செலினா ஜெட்லே கூறுகையில், நான் டெல்லி வருவதற்காக மும்பை விமான நிலையத்தில் காத்திருந்த போது, இரண்டு காலிலும்காயமடைந்த ஒருவர் என்னிடம் வந்து, மிஸ்.இந்தியா என்ற முறையில் பூமி அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்றுகேட்டார்.
எனக்கு அவரைப் பார்த்த போது அழுகையே வந்து விட்டது. குஜராத்தில் நடந்தது மிகப்பெரிய இயற்கைச் சீற்றம். குஜராத் மக்கள் பாதிப்பிலிருந்து மீளஇன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். மனித நேய அடிப்படையில் நாம் அனைவரும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவிசெய்ய வேண்டும்.
மிஸ் இந்தியா என்ற பட்டத்தின் முக்கியத்துவம் எனக்கு ஞாயிற்றுக்கிழமை வரை தெரியவில்லை. கடந்த 15 மணிநேரம் என்னை முழுவதுமாகமாற்றிவிட்டது. மிஸ் இந்தியா என்ற பட்டம் மிகப்பெரிய பொறுப்புக்குரிய பட்டம் என்பது எனக்கு இப்போதுதான் புரிந்தது.
மிஸ் இந்தியா என்ற முறையில், குஜராத்துக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்யக் காத்திருக்கிறேன். எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்வதையும் எனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன் என்றார்.
யு.என்.ஐ.