குழு அனுப்புகிறது இஸ்ரேல்
Subscribe to Oneindia Tamil
ஜெருசலேம்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து மீட்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவைஅனுப்ப இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக, இஸ்ரேல் வானொலி திங்கள்கிழமை தெரிவித்தது.
இஸ்ரேல் அனுப்பும் 150 பேர் கொண்ட குழுவில், மருத்துவர்கள், ராணுவ அதிகாரிகள், பிற அதிகாரிகள் ஆகியோர்இடம் பெற்றுள்ளனர். இவர்கள் திங்கள்கிழமை மாலை இஸ்ரேலிலிருந்து புறப்பட்டு இந்தியா வருகிறார்கள்.
இந்தக் குழு குஜராத்தில் இரண்டு வாரங்கள் தங்கி மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும்மேற்கொள்ளும். அவர்கள் அங்கேயே மருத்துவமனைகள், வார்டுகள், ஆபரேஷன் தியேட்டர்கள், பரிசோதனைக்கூடங்கள், எக்ஸ் ரே எடுக்கும் அறைகள், அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை அமைத்து பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவி செய்வார்கள் என்றும் இஸ்ரேல் வானொலி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications