கோவை மாவட்டத்தில் நிலநடுக்கம்?
கோவை:
தமிழக, கேரள எல்லைப் பகுதியான மலப்புரத்தில் உள்ள கிணறுகளில் உள்ள தண்ணீர்,கொப்பளித்ததால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். தொடர்ந்துநில நடுக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் கோவை, கேரளா மற்றும்தமிழகத்தின் பல பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழக கேரள எல்லைப் பகுதியான மலப்புரம், சுங்கத்தரா அருகே உள்ளவாப்பு என்பவரின் கிணற்றில் இருந்த நீர் கொப்பளிக்க ஆரம்பித்துள்ளது. மேலும்,கிணற்றிலிருந்து தண்ணீர் பொங்கி வழியத் தொடங்கியது.
இதே போன்று கேரள எல்லையில் உள்ள நீலம்பூர் அருகே உள்ள அந்திக்குன்னா என்றஇடத்தில் உள்ள கிணற்றிலும் நீர் கொப்பளித்துள்ளது.
இதனால் நீலகிரி மற்றும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் நில நடுக்கம்ஏற்படுவதற்கான அறிகுறி தான் என நினைத்து பீதியடைந்துள்ளனர்.
பல இடங்களில் மக்கள் இரவு நேரங்களில் வீட்டிற்குள் தூங்காமல் வெளியில் படுத்துத்தூங்குகின்றனர்.