ஸ்ரீரங்கநாதரை வழிபட்டார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சிக்கு மூன்று நாட்கள் பயணமாக வந்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.
திருச்சியில் திங்களன்று நடைபெறும் அப்துல் லத்தீப் தலைமையிலான தேசீய லீக் கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஞாயிறன்றுஅதிகாலை திருச்சி வந்த ஜெயலலிதா பிற்பகலில் திடீரென்று ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றார். வழக்கமாக அவருடன் வரும் சசிகலாஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு வரவில்லை.
கோயில் வளாகத்தில் உள்ள 108 சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்த ஜெயலலிதாவிற்கு கோவில் நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதை அளித்துவரவேற்றனர்.
திருச்சி பயணத் திட்டம் முழுவதும் பரம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால் கட்சித்தலைவர்களும், போலீசாரும் குழப்பத்தில் இருந்தனர்.












Click it and Unblock the Notifications