For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோலகலமாக நடந்த முருகன் கோவில் கும்பாபிஷேகம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் அல்சூரில் அமைந்திருக்கும் ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் திங்கள் கிழமை காலை 9.50 மணிக்குசிறப்பான முறையில் நடந்தது.

அல்சூரில் பழைய மெட்ராஸ் சாலையில் அமைந்திருப்பது சுமார் 350 ஆண்டுகள்பழமையான ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். 1982-ம் ஆண்டுக்கு பிறகுதிங்கள்கிழமை (21.01.2001) கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டது. திங்கள் கிழமை காலை 8.20மணிக்கு பூரணஆகுதி செய்யப்பட்டது. பூரண ஆகுதியில் ஹோமத்தீயில் காசுகள்போடப்பட்டன. அதன் பின் ஹோமகுண்டத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேகம் செய்யும் அர்ச்சர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டது.

9.35 மணி அளவில் புனித நீர் கலசங்கள் யாக சாலையிலிலிருந்து கோவில் பிரகாரவலம் வந்து கும்பாபிஷேகம் செய்யப்படும் விமானங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.

9.45 மணிக்கு முதலில் கிழக்கு மகா கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.அதன் பின் மற்ற கோபுரங்களுக்கும், நிறைவாக முருகனின் விமானத்திற்கும்கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தின்போது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின்கோஷத்திற்குப் பின்னர் மூலஸ்தானத்தில் இருக்கும் சுப்ரமணிய சுவாமிக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக வைபவத்தில் ஆயிர்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X