விசிறி சாமியார் சுகவீனம்.. தீவிர சிகிச்சை
திருவண்ணாமலை:
விசிறி சாமியார் என பக்தர்களால் அழைக்கப்படும் திருவண்ணாமலை, யோகி ராம் சுரத்குமார் உடல்நலம்கவலைக்கிடமாக உள்ளது.
புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த விசிறி சாமியார் சமீபத்தில்தான் அறுவைச் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.இதுவும் கூட பக்தர்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவே நடந்தது.
சிகிச்சைக்குப் பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் தனது மடத்திற்குத் திரும்பினார். இந்த நிலையில்,மீண்டும் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மடத்திலிருந்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. வயோதிகம், சர்க்கரை சத்து, நுரையீரல் பலவீனமாக இருப்பது ஆகியவை காரணமாகவிசிறி சாமியார் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நிலை நாளுக்கு நாள் கவலை தரும்விதத்தில் உள்ளது. டாக்டர்கள் குழு அவருக்குத் தொடர்ந்துசிகிச்சை அளித்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், விசிறி சாமியார் உடல் நிலை குறித்து வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் என்றும் அதில்கோரப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications