For Quick Alerts
For Daily Alerts
Just In
எம்.ஆர்.ராதா மன்றத்தை திறந்தார் வி.பி.சிங்
சென்னை:
நடிகர் எம்.ஆர்.ராதா மன்றத்தை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சென்னையில் திறந்துவைத்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் பெரியார் மையம்அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நடிகர் எம்.ஆர்.ராதா மன்றம் அமைக்கப்பட்டு அதன்திறப்பு விழா நடைபெற்றது. த.மா.கா. தலைவர் மூப்பனார் தலைமையில் நடைபெற்றஇவ்விழாவில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங். மன்றத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு, வரதராஜன், ஜனதாதளத்தலைவர் வடிவேலு, நடிகர் ராதாரவி, இயக்குநர் வேலு பிரபாகரன் ஆகியோர்கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய கி.வீரமணி, குஜராத் பூகம்ப நிவாரண நிதியாக ஒரு லட்சம்ரூபாய் அளிப்பதாகத் தெரிவித்தார்.
Comments
Story first published: Monday, January 29, 2001, 5:30 [IST]