கிரிக்கெட் அணிக்குப் புதிய "மருந்து
பெங்களூர்:
இந்தியக் கிரிக்கெட் வாரியமும், பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனமும் இணைந்து இந்திய கிரிக்கெட் அணிக்கான சாப்ட்வேர் ஒன்றை (இ-கிரிக்கெட்ப்ரோ) தயாரித்துள்ளன.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு அடுத்து இந்திய அணிக்கு இத்தகைய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியை தலைசிறந்த மூன்று அணிகளுக்குள் ஒன்றாக கொண்டு வருவதில் பயிற்சியாளர் ஜான் ரைட்டிற்கு இது உறுதுணையாக இருக்கும் என இதனைவெளியிட்டுப் பேசிய இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஏ.சி.முத்தையா தெரிவித்தார்.
இந்திய வீரர்கள் தங்கள் திறமையை உணர்ந்து வெளிப்படுத்துவதில் இந்த சாப்ட்வேர் துணைபுரியும் என இந்திய கிரிக்கெட் வாரியச் செயலர் ஜே.ஒய்.லீலேதெரிவித்தார்.
இந்த சாப்ட்வேரைத் தயாரித்துள்ள நிறுவனத்தின் தலைவர் சதீஷ் பெங்களூர் கூறும் போது, விளையாட்டுத் துறை வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் சிறந்தபங்களிப்பாகும் இது என்றார். கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு இந்த சாப்ட்வேர் இருப்பது மட்டும் போதாது என்றவர் இதனை தகுந்த முறையில்பயன்படுத்தி வெற்றிக்கு வழிகாண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
போட்டியின் போதும் போட்டி முடிந்த பின்னரும் வீரர்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி அவர்கள் தங்கள் தவறைத் திருத்திக் கொள்வதற்கும்,திறமையை அறிந்து அதிகரித்துக் கொள்வதற்கும் வழி காணப்படும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் தெரிவித்தார்.