போர்வை அனுப்பியது பாக்.
இஸ்லாமாபாத்:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போர்வைகள், கூடாரம் அமைப்பதற்கான துணிகள்ஆகியவற்றை ஒரு விமானம் மூலம் பாகிஸ்தான், இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் விமானமான சி-130, இந்தப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, செவ்வாய்க்கிழமைகாலை 9.24 மணிக்கு இஸ்லாமாபாத்திலிருந்து கிளம்பியது. அந்த விமானம் அகமதாபாத்தில் வந்து இறங்கும்.
மொத்தம் 200 கூடாரங்களுக்கான துணிகள், 2500 போர்வைகள், ஜமக்காளங்கள் ஆகியவை விமானத்தில்அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அடுத்த 2 நாட்களில்மேலும் 3 விமானங்கள் இதுபோன்ற பொருட்களுடன் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட அதே நேரத்தில் பூகம்பம் ஏற்பட்டது. இருப்பினும் அங்கு சேதம்குறைவாகவே இருந்தது. 12 பேர் இதில் பலியாயினர்.