வாரி வழங்குங்கள் நிதியை .. கோருகிறார் கருணாநிதி
சென்னை:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமான பண உதவிஅளிக்குமாறு முதல்வர் கருணாநிதி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழ்நாடு அரசுநிவாரண நிதி திரட்டுகிறது.
இதற்கு பொதுமக்கள் அனைவரும் தாராளமான அளவில் நிதி உதவி அளிக்கவேண்டும் என பொதுமக்களை முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
திங்கள்கிழமை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய போது முதல்வர்கூறியதாவது:
நாடு முழுவதும் குடியரசு தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த போது நாட்டின் பலபகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் கடும் சேதம்ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்களின் உருக்க மிகு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். குஜராத் பூகம்பத்திற்கு நிதி உதவியாக தமிழக அரசு ரூ 5 கோடிவழங்கியுள்ளது. மேலும் குஜராத் மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு நிதிதிரட்டுகிறது. இதற்கு பொதுமக்கள் தாராளமாக பண உதவி அளிக்க வேண்டும் எனமுதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குஜராத் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவி, பொருள் உதவி உள்ளிட்டஅனைத்து உதவிகளையும் செய்ய இந்த அரசு முன் வந்துள்ளது
தமிழக அரசு மூலமாக நிவாரண நிதி அனுப்ப விரும்புபவர்கள் "குஜராத் நில நடுக்கநிவாரண நிதி (Gujarat earthquake Relief Fund) என்ற பெயரில் தலைமைச்செயலகத்தில் இருக்கும் பொதுத் துறை செயலாளர்களுக்கு காசோலை மூலமாகடிமான்ட் டிராப்ட் மூலமாகவோ அனுப்புமாறு தெரிவித்துக் கொள்கிறேன் எனகூறினார்.












Click it and Unblock the Notifications