For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நக்சல்கள் துப்பாக்கிச் சண்டை .. 5 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி :

தர்மபுரி அருகே போலீசாருக்கும் நக்சல் கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டைநடந்தது. இதில் நக்சல் கும்பலின் மற்றொரு தலைவன் பிடிபட்டான். 2 பெண்கள்உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக தர்மபுரியில் இயங்கி வரும் நக்சலைட் கும்பலைப் பிடிக்கபோலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மாறன் தலைமையில் இயங்கும் ஒரு கோஷ்டிக்கு அடுத்து , நக்சல் கும்பல் அமைப்பின்தலைவனாக காளிதாஸ் செயல்பட்டு வந்தார். இவர்கள் பதுங்கியிருப்பது குறித்ததகவல் போலீசாருக்குக் கிடைத்தது.

காரிமங்கலம் அருகே உள்ள மல்லிக் குட்டைப் பகுதியைப் போலீசார் சுற்றி வளைத்துசோதனையிட்டனர்.

அப்போது போலீசாரை நோக்கி துப்பாக்கியால் நக்சல் கும்பலைச்சேர்ந்தவர்கள் சுடஆரம்பித்தனர். போலீசாரும் பதிலுக்கு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுபயமுறுத்தினர். பின்னர் அக் கும்பலைச் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில், காளிதாஸ், ஆனந்தி, பாலன், முருகன், சத்தியா ஆகியோர் கையில்ஆயுதங்களுடனும் பைப் வெடிகுண்டுகளுடனும் பிடிபட்டனர்.

தீவிரவாதிகளிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள், 15 தோட்டாக்கள், நவீன கத்திகள்,பைப் வெடிகுண்டுகள், நக்சல் ஆதரவு பிரசுரங்கள், சங்கேத மொழியில் குறிக்கப்பட்டடைரி மற்றும் துணிகளைக் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, ரவீந்திரன்வாங்கிய துப்பாக்கி எனத் தெரிய வந்துள்ளது.

ரவீந்திரனின் சாவிற்குப் பிறகு நக்சல் கும்பலின் தலைவனாக காளிதாஸ் இருந்துவந்துள்ளான். இவர்களுக்கு உதவிய புரட்சிகர மாணவர் யூனியன், உழவர்உழைப்பாளர் அமைப்பாளர்கள் மற்றும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X